Wednesday, June 20, 2018

நிகழ்கால நடப்புகள்...

நமக்கு பசித்தால்-
நாம் குரைத்தால்
புறை எறிந்திடுவர்!!
அதை பிடித்தால்-
வாயால் அணைத்தால்
இதை நிதம் செய்திடுவர்!!
பலனாய் முறைத்தால்-
அவரிடம் விளித்தால்
கூண்டினில் அடைத்திடுவர்!!
அவர் கால் பிடித்தால்-
கயமை மறந்தால்
கையது அசைத்திடுவர்!!
வாசல் திறந்தால்-
அந்நாள் வந்தால்
நம் காலில் விழுந்திடுவர்!!
புறையும் தந்தால்-
காலில் விழுந்தால்
மீண்டும் செயித்திடுவர்...

Sunday, May 27, 2018

வா தமிழா!!!

வீறு கொண்டு எழு தமிழா
உன் வீடு தமிழ்நாடு காக்கவே
காலில் வீழ்ந்து கேட்டது போதும்
காளை வாழ்வை காத்தவனே
சாத்திரங்கள் கட்டியாண்டு
புகழ் தத்துவங்கள் பல கொண்டு
இன்றியமையாது நின்ற நாடு
இது ஏறுமுகமே கண்ட நாடு
அழுது புரண்டு பயனில்லை
அயலவனை அண்டிவாழ தேவையில்லை
துயரென வரும் வேளையிலே
தூங்கியது போதும் எழு தமிழா
துச்சமாக எண்ணி நின்றவனை
தூக்கில் ஏற்றி துணிவை காட்ட வா தமிழா...